இயல் 1
இன்பத்தமிழ்
⚔ தமிழுக்கும் அமுதென்று பேர் அந்
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்…….
… தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் - பாரதிதாசன்
… தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் - பாரதிதாசன்
சொல்லும் பொருளும்
- நிருமித்த -உருவாக்கிய
- விளைவு -விளைச்சல்
- சமூகம் -மக்கள் குழு
- அசதி - சோர்வு
பொதுவானக்குறிப்புகள்
- பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம்
- பாரதியார் மீது கொண்ட பற்றின் காரணமாகப் பாரதிதாசன் எனப் பெயரைப் மாற்றிக் கொண்டார்
- புரட்சிக்கவி என்று அழைக்கப்படுபவர்.
- பாவேந்தர் என்றும் போற்றுவர்.
தமிழ் கும்மி
⚔ கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங்கோ
தையரே கும்மி கொட்டுங்கடி….
… உயிர் மெய் புகட்டும் அற மேன்மை கிட்டும் இந்த
மேதினி வாழ வழி காட்டி இருக்கும் - பெருஞ்சித்திரனார்
சொல்லும் பொருளும்
- ஆழி பெருக்கு - கடல் கோள்
- மேதினி -உலகம்
பொதுவானக்குறிப்புகள்
- பெருஞ்சித்திரனார் இயற்பெயர் மாணிக்கம்
- பாவலரேறு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்
- பாவியக்கொத்து, நூறாசிரியம் இவரின் படைப்புகள்
வளர் தமிழ்
- யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் -பாரதியார்
- என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய் -பாரதியார் (பாரதத் தாய்க்கு பாடப்பட்டது இது தமிழ் தாய்க்கும் பொருந்தும்)
- வலஞ்சுழி எழுத்துக்கள் -ஆ, ஏ, ஔ, ண, ஒ
- இடஞ்சுழி எழுத்துக்கள் -ட, ய, ழ.
தமிழ் | தொல்காப்பியம் | தமிழென் கிளவியும் அதனோ ரற்றே |
தமிழ்நாடு | சிலப்பதிகாரம், வஞ்சிக்காண்டம் | இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இது நீ கருதினை ஆயின் |
தமிழன் | அப்பர் தேவாரம் (திருத்தாண்டகம்) | …தமிழன் கண்டாய் |
- உயர்திணை, அஃறிணையென இருவகை திணைகள்
- உயர்திணை -எதிர்ச்சொல் தாழ்திணையென அமைய வேண்டும், ஆனால் (அல் + திணை = உயர்வு அல்லாத திணை) என்று பெயரிட்டனர்.
பூவின் ஏழு நிலைகள்
- அரும்பு
- மொட்டு
- முகை
- மலர்
- அலர்
- வீ
- செம்மல்
மா என்ற சொல்லின் பொருள்
- மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு.
⚔ இயல் தமிழ் =எண்ணத்தை வெளிப்படுத்தும்
⚔ இசைத்தமிழ் =உள்ளத்தை மகிழ்விக்கும்
⚔ நாடகத்தமிழ் = உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்தும்.
இலைகளின் பெயர்கள்
- இலை =ஆல், அரசு, மா, பலா, வாழை
- கீரை =அகத்தி, பசலை, முருங்கை
- புல் =அருகு, கோரை
- தாள் =நெல், வரகு
தமிழ் எண்கள்
1- க, 2-உ, 3 -௩, 4 - ச, 5-ரு, 6-௬, 7-எ, 8 - அ, 9-௯, 10-கo,
இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் சில தமிழ்ச்சொற்கள்
- வேளாண்மை =கலித்தொகை, திருக்குறள்
- உழவர் = நற்றிணை
- பாம்பு = குறுந்தொகை
- வெள்ளம் =பதிற்றுப்பத்து
- பார் =பெரும்பாணாற்றுப்படை
- ஒழி =தொல்காப்பியம் (கிளவியாக்கம்)
- முடி =தொல்காப்பியம் (வினையியல்)
⚔ பிறந்த நாள் வாழ்த்து
நீண்ட நீண்ட காலம்-நீ, நீடு வாழ வேண்டும்!
வானம் தீண்டும் தூரம்-நீ, வளர்ந்து வாழ வேண்டும்!
அன்பு வேண்டும்! அறிவு வேண்டும்! பண்பு வேண்டும்! பரிவு வேண்டும்!
எட்டுத்திக்கும் புகழ வேண்டும்! எடுத்துக்காட்டு ஆக வேண்டும்!
உலகம் பார்க்க உனது பெயரை, நிலவுத் தாளில் எழுத வேண்டும்!
சர்க்கரைத் தமிழ் அள்ளி, தாலாட் டு நாள் சொல்லி வாழ்த்துகிறோம்!
பிறந்த நாள் வாழ்த்துகள்! பிறந்த நாள் வாழ்த்துகள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
நீண்ட நீண்ட காலம்-நீ, நீடு வாழ வேண்டும்!
வானம் தீண்டும் தூரம்-நீ, வளர்ந்து வாழ வேண்டும்!
அன்பு வேண்டும்! அறிவு வேண்டும்! பண்பு வேண்டும்! பரிவு வேண்டும்!
எட்டுத்திக்கும் புகழ வேண்டும்! எடுத்துக்காட்டு ஆக வேண்டும்!
உலகம் பார்க்க உனது பெயரை, நிலவுத் தாளில் எழுத வேண்டும்!
சர்க்கரைத் தமிழ் அள்ளி, தாலாட் டு நாள் சொல்லி வாழ்த்துகிறோம்!
பிறந்த நாள் வாழ்த்துகள்! பிறந்த நாள் வாழ்த்துகள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
- கவிஞர் அறிவுமதி.
கனவு பலித்தது
- கடல் நீர் ஆவியாகி மேகமாகி மழை தரும் எனக் கூறும் பழந்தமிழ் இலக்கியங்கள்-முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது, திருப்பாவை ஆகிய நூல்கள் கூறுகின்றன.
⚔ கடல் நீர் முகந்த கமஞ் சூல் எழிலி - கார் நாற்பது
⚔ ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால்நாழி - ஒளவையார்
- திரவப்பொருள் எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவை சுருக்க முடியாது
⚔ நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு -பதிற்றுப்பத்து
- போர்க்களத்தில் மார்பில் பட்ட புண்ணை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி பதிற்றுப்பத்து கூறுகிறது
5.தமிழ் எழுத்துக்களின் வகை தொகை
- தமிழ்மொழியின் இலக்கண வகை ஐந்து
- எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம்
எழுத்து
- ஒலி வடிவாக எழுப்பப்படுவது மற்றும் வரி வடிவமாக எழுதப்படுவது
உயிர் எழுத்துக்கள்
- 12 எழுத்துகள்
- அ, இ, உ, எ, ஒ -5 ம் குறுகி ஒலிக்கும்
- ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள -7 -ம் நீண்டு ஒலிக்கும்
- குறில் எழுத்துக்கள் ஒரு மாத்திரை அளவு கொண்டவை
மெய்யெழுத்துக்கள்
- 18 எழுத்துகள்
- வல்லினம் க், ச், ட், த், ப், ற்.
- மெல்லினம் ங், ஞ், ண், ந், ம், ன்.
- இடையினம் ய், ர், ல், வ், ழ், ள்.
கலைச்சொற்கள்
- வலஞ்சுழி -Clockwise
- செயலி - App
- புலனம் - Whatsapp
- மின்னஞ்சல் - E-mail