அகநானூறு
அகநானூற்றின் உருவம்:- திணை = அகத்திணை
- பாவகை = ஆசிரியப்பா
- பாடல்கள் = 400
- பாடியோர் = 145
- அடி எல்லை = 13-31
பெயர்க்காரணம்:
- அகம் + நான்கு + நூறு = அகநானூறு
- அகத்திணை பற்றிய நானூறு பாடல்கள் கொண்டுள்ளதால் அகநானூறு எனப் பெயர் பெற்றது.
- அகம்
- அகப்பாட்டு
- நெடுந்தொகை
- நெடுந்தொகை நானூறு
- நெடும் பாட்டு
- பெருந்தொகை நானூறு
- தொகுத்தவர் = உப்பூரி குடி கிழார் மகனார் உருத்திரசன்மனார்
- தொகுப்பித்தவர் = பாண்டியன் உக்கிர பெருவழுதி
- நூலிற்கு முதலில் உரை எழுதியவர் = நா.மு.வேங்கடசாமி நாட்டார்
- நூலை முதலில் பதிப்பித்தவர் = வே. இராசகோபால் ஐயர்
- 1-120 = களிற்றியானை நிரை
- 121-300 = மணிமிடைப் பவளம்
- 301-400 = நித்திலக்கோவை
- 1,3,5,7,9 என வருவன = பாலைத்திணை ( 200 பாடல்கள்)
- 2,8,12,18 என வருவன = குறிஞ்சித்திணை ( 80 பாடல்கள்)
- 4,14,24 என வருவன = முல்லைத்திணை ( 40 பாடல்கள்)
- 6,16,26 என வருவன = மருதத்திணை ( 40 பாடல்கள்)
- 10,20,30 என வருவன = நெய்தல் திணை ( 40 பாடல்கள்)
ஒன்றுமூன்று ஐந்துஏழ்ஒன் பான்பாலை; ஓதாதுநின்றவற்றில் நான்கு நெறிமுல்லை; அன்றியேஆறாம் மருதம்; அணிநெய்தல் ஐயிரண்டுகூறாதவை குறிஞ்சிக் கூற்று
பாலைவியம் எல்லாம்; பத்தாம் பனிநெய்தல்
நாலு நளிமுல்லை; நாடுங்கால் மேலையோர்
தேரும் இரண்டொட்டு இவைகுறிஞ்சி; செந்தமிழின்
ஆறு மருதம் அகம்
அகநானூறு குறிப்பிடும் அரசர்கள்:- அதியமான் எழினி
- சோழன் கரிகாலன் பாண்டியன் நெடுஞ்செழியன்
- உதியஞ் சேரலாதன் ஆதிமந்தி
- இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
- இந்நூலில் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = சிவபெருமான்
- சோழர்களின் குடவோலைத் தேர்தல் முறையை பற்றி கூறுகிறது.
- சங்க இலக்கியங்களுள் வரலாற்று செய்திகளை அதிகமாக கூறும் நூல் அகநானூறு.
- பண்டைய தமிழ் மக்களின் திருமண விழ நடைபெறும் விதம் பற்றி கூறுகிறது.
- அலெக்சாண்டரின் படையெடுப்புக்கு அஞ்சி நந்தர்கள் தமது செல்வங்களை எல்லாம் கங்கையாற்றின் அடியில் புதைத்து வைத்த செய்தி 20,25ஆம் பாடல்களில் கூறப்பட்டுள்ளது..
- சொல்ல வந்த கருத்தை உள்ளுறை வழியாக கூறுவது இதன் சிறப்பு.
- கொற்கை துறைமுகத்தில் யவனர்கள் பொன்னை சுமந்து வந்து பதிலாக கடுகை ஏற்றி சென்றனர்
- கொற்கை ஆடவர் முத்து குளிப்பது போல் வலம்புரி சங்கெடுத்து ஆற்றில் மூழ்குவர்
- வெண்ணிப்போர், ஆலங்கானத்து போர் உவமையால் கூறுகிறது
- 82 111 352 301 பண்டைய தமிழ் இசை பற்றி கூறுகிறது 352 செய்யுளிசை இலக்கணத்தை குறிப்பிடுகிறது
- கோடை மருந்து பயன்படுத்திய சொற்கள்
- ஔவையார் சங்ககால பெண்பாற் புலவர்கள் சிறந்து விளங்கியவர் அதியமான் நெடுமான் அஞ்சி என்னும் குறுநில மன்னர்கள் ஆழ்ந்த நட்பு கொண்டவர் நம் மன்னன் அவைக்களப் புலவர் ஆவார்
- வீரை வெளியன் தித்தன் ஒரே ஒரு பாடல் பாடியுள்ளார்
- அம்மூவனார் அகப்பொருள் மட்டுமே பாடிய புலவர் நெய்தல் திணை பாடுவதில் வல்லவர்
- இம்மை உலகத்து இசையோடும் விளங்கி
- மறுமை யுலகமும் மறுவின்றி எய்துப
- செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
- சிறுவர்ப் பயந்த செம்ம
- நாவோடு நவிலா நகைபடு தீஞ்சசொல்
- யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வன்
- யவனர் தந்த வினைமாண் நன்கலம்
- பொன்னோடு வந்து கறியோடு பெயரும்
- செந்தார்ப் பைங்கிளி முன்கை ஏந்தி
- இன்றுவரல் உரைமோ சென்றிசினோர் திறத்தென
- இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென
- மழலை இன்சொல் பயிற்றும்
- முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire) - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8, பாகம் -9, பாகம் -10
- ENABLE Color print option IN HP Color LaserJet CP1515n UPD PCL 6 in tamil - இங்கே தொடவும்
- வேத காலம் தமிழ் குறிப்புகள் - இங்கே தொடவும்
- சிந்துசமவெளி (sindu samaveli nagarigam) மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4,
- டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8,
- குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)- பாகம் -1, பாகம் -2, பாகம் -3
- மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu tamil medium notes) - பாகம் -1, பாகம் -2