நெடுநல்வாடையின் உருவம்:
- திணை = முல்லைத்திணை, வஞ்சித்திணை(அகமும் புறமும் கலந்த நூல்)
- பாவகை = ஆசிரியப்பா
- அடி எல்லை = 188
- தலைவன் பிரிவால் வருந்தும் தலைவிக்கு நெடிய வாடையாகவும், கடமையாற்றும் வேந்தனுக்கு நல்வாடையாகவும் திகழ்வதால் நெடுநல்வாடை என் ஆயிற்று.
- நெடுமை + நன்மை + வாடை = நெடுநல்வாடை
- பத்து பாட்டின் இலக்கிய கருவூலம்
- மொழிவளப் பெட்டகம்
- சிற்பப் பாட்டு
- தமிழ்ச் சுரங்கம்(திரு.வி.கா)
- நக்கீரர் கண்ட தமிழ்ச்சுரங்கம்
- பாடிய புலவர் = நக்கீரர்( மதுரை கணக்காயனார் மகன்)
- பாட்டுடைத் தலைவன் = தலையானங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
- கோதண்டபாணி பபிள்ளை உரை
- வேங்கடா செட்டியார் உரை
- நூலின் பெயர் காரணத்தை திரு.வி.க அவர்கள், “வாடை துன்பத்தைக் குறிக்கும்; நல்ல என்பது அன்பை குறிக்கும்; நெடு என்பது அழியாமையை குறிக்கும்; எனவே அழியாது நீளும் நல்வாடை” என்றார்.
- திரு.வி.க அவர்கள்,”ஒரு சிறு புல் நுனியில் மருவும் ஒரு பனித்துளியிடை ஒரு பெரிய ஆலமரம் காட்சி தருவது போல சிறிய நெடுநல்வாடையில் பெரிய உலகம், உயிர், அன்புத் தெய்வம் இவற்றின் திறன்கள் முதலியன காட்சி தருகின்றன” என்றார்.
- திரு.வி.க அவர்கள், “நெடுநல்வாடை ஒரு பெருஞ்சுரங்கம்; நக்கீரர் கண்ட சுரங்கம்; தமிழ்ச்சுரங்கம்” என நூலை பாராட்டுகிறார்.
- நெடுநல்வாடை பாட்டு தலைவனாக பாண்டியன் நெடுஞ்செழியனை குறிக்கிறது எனக் கூறியவர் நச்சினார்கினியர் ஆவார்.
- “கொற்றவை வழிபாடே பாட்டின் நடுமணியாகப் பதிந்துள்ள வைரம்” என்கிறார் மு.வரதராசனார்
- பாண்டிமாதேவியைப் “புனையா ஓவியம்” என வருணிக்கின்றது இந்நூல்.
- இதில் கூறப்பட்டுள்ள பாசறை = கூதிர் பாசறை
- பேராசிரயர் சுந்தரம்பிள்ளை, இந்நூலை
- பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
- எத்துணையும் பொருட்கிசையும் இலக்கிணமில் கற்பனையே எனப் புகழ்கிறார்.
- கட்டிட சிற்பியை நூலறி புலவர் என்கிறார் புலவர் 12 ராசிகளையும் விண்மீன்களையும் வரைந்த செய்திகளைக் கூறுகிறது
- குன்று குளிர்ப்பன்னக் கூதிர்ப்பானாள்
- வேம்புதலை யாத நோன்காழ் எஃகம்
- சிலரொடு திரிதரும் வேந்தன்
- பலரொடு முரணிய பாசறைத் தொழிலே
- மா மேயல் மறப்ப மந்தி கூர
- பறவை பதிவான வீழ, கறவை
- கன்று கோள் ஒழியக் கடிய வீசி
- முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire) - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8, பாகம் -9, பாகம் -10
- ENABLE Color print option IN HP Color LaserJet CP1515n UPD PCL 6 in tamil - இங்கே தொடவும்
- வேத காலம் தமிழ் குறிப்புகள் - இங்கே தொடவும்
- சிந்துசமவெளி (sindu samaveli nagarigam) மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4,
- டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8,
- குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)- பாகம் -1, பாகம் -2, பாகம் -3
- மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu tamil medium notes) - பாகம் -1, பாகம் -2